தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் இன்று மாலை சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு குறித்து தமிழ் ...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் இன்று மாலை சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மல்லை 5.30மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினர்
இதன்போது மீண்டும் பாராளுமன்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.