அரசியல் கட்சிகள், பதிவு, யாழ் எக்ஸ்பிரஸ்
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான 156 விண்ணப்பங்களில் சுமார் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசீலனையின் அடிப்படையிலேயே, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆவணங்களில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் நிலுவையில் உள்ள காரணத்தினால், புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை 2017 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை தொடர்ந்து, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.