காயமடைந்த தடுப்பில் வைத்து இளைஞனை படையினரை காப்பாற்றி கோப்பாய் பொலிஸார்..

காயமடைந்த தடுப்பில் வைத்து இளைஞனை படையினரை காப்பாற்றி கோப்பாய் பொலிஸார்..

படையினருடைய வாகனம் மோதி காலில் காயமடைந்த இளைஞனை 2 மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்த பின் விடுவித்த சம்பவம் நேற்று  இடம்பெற்ற...


படையினருடைய வாகனம் மோதி காலில் காயமடைந்த இளைஞனை 2 மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்த பின் விடுவித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்வியங்காடு இராமசாமி பரியார் சந்தியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

திருநெல்வேலி சந்தியில் பக்கம் இருந்து கல்வியங்காடு சந்தியை நோக்கி சென்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, இராசபாதை வீதி யூடாக நல்லூர் பகுதியை நோக்கி சென்ற இராணுவத்தின் யூகா 50320 எனும் இலக்கமுடைய கப் ரக வாகனம் மோதி தள்ளியதில் கல்வியங்காடு பகுதியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளானான்.

குறித்த விபத்தினால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் அறிந்து அவ்விடத்திற்கு பொறுப்பதிகாரி தலைமையில் வந்திருந்த சீருடை அணிந்த பொலிசார் மற்றும் சிவில் உடையில் வந்த பொலிசார் விபத்து நடைபெற்ற இடத்தில் கூடியிருந்தவர்களை அங்கிருந்து மிரட்டி அனுப்பி விட்டு காயத்திற்கு உள்ளான இளைஞனை கைது செய்த பொறுப்பதிகாரி தனது வாகனத்தில் ஏற்றியதுடன் , விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை சிவில் உடையில் வந்த பொலிசார் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார்.

அதேவேளை விபத்துக்கு உள்ளான கார் மற்றும் இராணுவத்தின் வாகனம் என்பவற்றையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் எவ்வித விசாரணைகளோ , விபத்து தொடர்பிலான எந்த விசாரணைகளும் இன்றி விபத்துக்கு உள்ளான வாகனத்தை விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதனால் , விபத்து நடைபெற்ற இடத்தில் நின்றவர்களும் விபத்துக்கு உள்ளான இளைஞனில் தவறில்லை ஏன் கைது செய்தீர்கள் என கேட்ட போதும் பொலிசார் எந்த பதிலும் அளிக்காமல் இளைஞனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

அதனால் அவ்விடத்தில் நின்றவர்களும் இளைஞனுடன் பொலிஸ் நிலையம் நோக்கி சென்ற போது , பொலிஸ் நிலைய வாயில் கதவை சாத்திய பொலிசார் விபத்திற்கு உள்ளான இளைஞனை மட்டும் பொலிஸ் நிலையத்தினுள் அழைத்து சென்று தடுத்து வைத்திருந்தனர்.

அதன் போது பொலிஸ் நிலையத்திற்குள் சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினர் விபத்துக்கு உள்ளான இளைஞனை மிரட்டும் தொனியில் விசாரணை செய்ததுடன், இளைஞனின் விபரங்களையும் பெற்றுக்கொண்டனர். பொலிஸ் நிலையத்தினுள் பொலிசாரின் காவலில் குறித்த இளைஞன் இருக்கும் போதே இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் இளைஞனின் தகவலை திரட்டினர்.

அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு இராணுவத்தின் கப்டன் தர அதிகாரியுடன் சிவில் உடையில் வந்த இராணுவ உயர் அதிகாரியொருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தனியே சந்தித்து கதைத்த பின்னர் விபத்துக்கு உள்ளான இளைஞன் மற்றும் கார் உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து மிரட்டும் தொனியில் கதைத்து விபத்து சம்பவம் தொடர்பில் சமரசமாக செல்ல நிர்பந்தித்துள்ளார்கள்.

அதேவேளை இராணுவ வாகனத்தில் தவறில்லை எனவும் , விரும்பின் காரின் செலவினை விபத்துக்கு உள்ளன இளைஞனிடம் இருந்து பெறும் மாறும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் இராணுவத்தினர் தமது விபத்துக்கு உள்ளான வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து கார் உரிமையாளரும் விபத்துக்கு உள்ளான இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை பெற்ற பின்னர் தனது காரினை எடுத்து சென்றார். காரினை எடுத்து செல்ல முன்னதாக காரின் செலவீனம் சுமார் 25 ஆயிரம் வரும் எனவும் கூறி சென்றார்.

விபத்துக்கு உள்ளான இளைஞனின் காலில் விபத்தினால் வலி இருந்த போதிலும் பொலிசார் அது தொடர்பில் எந்த கரிசனையும் இன்றி அவரை சுமார் இரண்டு மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுவித்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற காரில் பொருத்தப்பட்டு இருந்த கமராவில் விபத்து சம்பவம் முழுமையாக பதிவாகியுள்ள போதிலும் , மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனின் மீதே பிழை என இராணுவத்தினரும் , பொலிசாரும் சேர்ந்து குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை குறித்த இளைஞனை பொலிசாரும் இராணுவத்தினரும் தனியே பொலிஸ் நிலையத்தினுள் தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனின் நண்பர் ஊடாக சட்டத்தரணி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சட்டத்தரணி பொறுப்பதிகாரியை சந்திக்க வேண்டும் என பொலிசாரிடம் கோரிய போதிலும் அவரை சந்திக்க முடியாது என பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அவ்வேளை விபத்துக்கு உள்ளான இளைஞன் அவ்விடத்திற்கு வந்த போது , இளைஞனிடம் சட்டத்தரணி சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்ட போது அங்கு சிவில் உடையில் நின்ற பொலிசார் சட்டத்தரணியை இளைஞனுடன் கதைக்க விடாது தடுத்ததுடன், பொறுப்பதிகாரியின் அனுமதி இன்றி கதைக்க முடியாது என கூறி இளைஞனை சட்டத்தரணியுடன் கதைக்க அனுமதிக்காது தம்முடன் அழைத்து சென்று பொலிஸ் நிலையத்தினுள் இருத்தி வைத்தனர்.

இராணுவத்தினரின் வாகனம் மற்றும் காரினை விடுவித்த பொலிசார் அரை மணி நேரம் கழித்து விபத்துக்கு உள்ளான இளைஞனை விடுவித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் கையளித்தனர்.

காரின் உரிமையாளர் காரின் செலவினை ஏற்குமாறு விபத்துக்கு உள்ளான இளைஞனிடம் தொலைபேசி ஊடாக கேட்பாராயின் தான் விபத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சந்திக்க தயார் என பாதிக்கப்பட்ட இளைஞன் கூறியுள்ளார்.

காரின் உரிமையாளர் விபத்து நடைபெற்ற இடத்தில் இளைஞனில் தவறில்லை என கூறிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ உயர் அதிகாரியுடன் கதைத்த பின்னர் இளைஞன் மீதே தவறு எனும் நிலைக்கு சென்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3317,lanka,8609,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4212,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: காயமடைந்த தடுப்பில் வைத்து இளைஞனை படையினரை காப்பாற்றி கோப்பாய் பொலிஸார்..
காயமடைந்த தடுப்பில் வைத்து இளைஞனை படையினரை காப்பாற்றி கோப்பாய் பொலிஸார்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgULkwxoT3UUDwaodaMoyKsRVo6fuAFVfwKuLLjH_CbZorRnHDpcU4I8ki87lgBHdEFF49Pfnq66TrRjsWEKfFnAhQzL8pCWu39GupKdudb9mm-5PKlhsm9sd_8SFLVLTP3J0w_olkuOm8/s640/Yarlexpresscom_breaking_news_.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgULkwxoT3UUDwaodaMoyKsRVo6fuAFVfwKuLLjH_CbZorRnHDpcU4I8ki87lgBHdEFF49Pfnq66TrRjsWEKfFnAhQzL8pCWu39GupKdudb9mm-5PKlhsm9sd_8SFLVLTP3J0w_olkuOm8/s72-c/Yarlexpresscom_breaking_news_.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/08/blog-post_80.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/08/blog-post_80.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content