கிரிக்கெட், மஹேந்திர சிங் டோணி, டோணி, ஓய்வு, யாழ் எக்ஸ்பிரஸ்
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக் கொள்ளவும்."
இந்தப் பதிவுடன் புகைப்படங்கள் அடங்கிய காணொளி ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு உலகக் கிண்ணஅரையிறுதி போட்டியில்தான் தோனி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். இந்த நிலையில் இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.