நாடாளுமன்றத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்ப...
நாடாளுமன்றத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய நிலையத்திலிருந்து இன்று காலை 9.15 மணி முதல் அனுப்பிவைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளதுடன், இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.