கிறிஸ்தவர்களது புனித தலமாகிய மடு திருத்தலத்துக்கு முல்லைத்தீவில் இருந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர்....
கிறிஸ்தவர்களது புனித தலமாகிய மடு திருத்தலத்துக்கு முல்லைத்தீவில் இருந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர்.
மடு அன்னையின் திருத்தலத்தில் இடம்பெறவுள்ள திருவிழாவுக்காக வருடாவருடம் பல்வேறு நேர்த்திக்கடன்களை வைத்து பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழமை.
இந்நிலையில் இன்று காலை முதல் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதி வழியாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்துக்கு பாதயாத்திரையாக சென்றதனை அவதானிக்க முடிந்தது.
வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவர்களது புனித தலமாகிய மடு திருத்தலத்தில் எதிர்வரும் 15ம் திகதி ஆண்டு உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.