மின்சாரம், மின்தடை, யாழ் எக்ஸ்பிரஸ்
இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே, இந்த மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இரண்டு மணிநேரத்தில் மின்சாரத்தை மீள வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.