அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக சிறைச் சாலைகளுக்கு போதைப்பொருள் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த வாரத்தில் மூன்...
அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக சிறைச் சாலைகளுக்கு போதைப்பொருள் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த வாரத்தில் மூன்று கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் வருவது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் சிறைக் கைதிகள் சிலர் மந்தமாக இருந்ததாகவும் கடந்த வாரத்தில் அவர்களுள் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.