நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் யா...
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குப்பெட்டிகள் அனைத்தும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாளை காலை 7 மணிக்கு வாக்கென்னும் நடவடிக்கை ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கட்டிடத் தொகுதியில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.