தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு கட்சிக்காக வீடுவீடாக பிரச்சாரம் செய்த ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு கட்சிக்காக வீடுவீடாக பிரச்சாரம் செய்த வீடியோ வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான மயில்வாகனம் என்பவர் வீடொன்றில் ஈ.பி.டி.பி துண்டுப்பிரசுரத்தை விநியோகித்து, “வீணைக்கு நேரே ஒரு புள்ளடி..“ என குறிப்பிட்டு, 3 விருப்பு வாக்கு இலக்கங்களையும் குறிப்பிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சி எடுத்த முடிவை மத்தியகுழுவில் கேள்வி கேட்டார் என குறிப்பிட்டு, மணிவண்ணனை கட்சியின் பொறுப்புக்களில் இருந்து நீக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்ட நாளில் இந்த வீடியோ வெளியாகி முன்னணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.