வலி வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அழிந்து போகும் நிலையை எட்டி உள்ளதாக யாழ் மாவட்ட செயலகத்தில் 3/9/கடந...
வலி வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அழிந்து போகும் நிலையை எட்டி உள்ளதாக யாழ் மாவட்ட செயலகத்தில் 3/9/கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது
147 வருட கல்விப் பாரம்பரியத்தை கொண்ட பாடசாலை இடப்பெயர்வின் பின் யாழ் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே பல வருடங்களாக இயங்கி வருகிறது
சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றியே மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த பாடசாலை நடாத்தும் பகுதி சுகாதார ஏற்பாடுகள் போதாது எனவும் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றனர்
இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் குறித்த கட்டடத்திலிருந்து பாடசாலையை அகற்றுமாறு உரிமையாளரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர்
குறித்த பாடசாலைச் சமூகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் அவர்கள் செய்வதறியாது சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளனர் எனவே தமது பாடசாலை தொடர்ந்தும் இயங்க கூடிய வகையில் மாற்று வழி ஒன்றை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்