வவுனியா, ஆலங்கட்டி மழை, யாழ் எக்ஸ்பிரஸ், வீடுகள் சேதம்
வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் முப்பதிற்க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது.
இதனால் முப்பதிற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடைமைகளும் நாசமடைந்துள்ளன. அத்துடன் இரு ஆலயங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
வீடுகள், வீதிகளில் நின்ற மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மரம் வீழ்ந்தும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனால் முப்பது குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.