யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களை வாயை மூடுமாறு, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களை வாயை மூடுமாறு, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சைகை மூலம் எச்சரித்தார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைய இம்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு நடந்து கொண்டார். இந்த சம்பவம் ஊடகவியலாளர்களை அதிருப்தியடைய செய்தது.