தியாகி திலீபன் நினைவேந்தலை தடைசெய்யக் கோரி யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (21) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத...
தியாகி திலீபன் நினைவேந்தலை தடைசெய்யக் கோரி யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (21) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பொலிசார் தரப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக அவகாசம் கோரியதையடுத்து, மதியம் 1.30 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகினார்.
இதேவேளை, இன்றைய வழக்கில் நினைவேந்தல் விவகாரத்தில் பிரதிவாதிகள் தரப்பில் விரிவான சமர்ப்பணங்கள் செய்யப்படவுள்ளன. யாழ் மாநகரசபை சார்பிலும் சட்டத்தரணியொருவர் முன்னிலையாகிறார்.
இன்றைய வழக்கின் தீர்ப்பை சாதகமாக எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.