தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக...
தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.இந்நிலையில் தடைகளை தாண்டி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை தியாக தீபம் திலீபனுக்கு உரும்பிராய் பகுதியில் அஞ்சலி செலுத்திய போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.