பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு இடையுறு விளைவித்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம...
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு இடையுறு விளைவித்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம மாரவ பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த வீட்டில் 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பொலிஸாருக்கு இடையுறு விளைவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்களாக நான்கு பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டதை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலை முன்னெடுத்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.