வானிலை, யாழ் எக்ஸ்பிரஸ்
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
எனினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று ஜிந்தோட்டை, கல்வெலவத்தை, கல்லெல்ல, அத்துரலிய ஆகிய கஹந்தமோதர பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.08 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
செப்டம்பர் 06 ஆம் திகதி முற்பகல் 9 மணியில் இருந்து செப்டம்பர் 07ஆம் திகதி முற்பகல் 9 மணி வரையான காலப்பகுதியில் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது .