தொல்பொருள் திணக்கள அதிகாரிகளை தாக்கி, சிறைவைத்த சுமணரத்ன தேரரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. செங்கலடி, பங்குடாவெளி பகுதியில் தொல்பொரு...
தொல்பொருள் திணக்கள அதிகாரிகளை தாக்கி, சிறைவைத்த சுமணரத்ன தேரரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
செங்கலடி, பங்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில அரச அதிகாரிகளை தாக்கியது, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைவைத்ததாக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமணரத்ன தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
அது குறித்த காணொலிகளும் வெளியாகின.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அடைத்து வைத்து, சுமணரத்ன தேரர் அடாவடியில் ஈடுபட்டிருந்தார்.
இது குறித்து தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவர் முறைப்பாடு செய்தனர். இதன்படி, இன்று எறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், நீதிவான கருப்பையா ஜீவராணி முன் அவர் மற்றும் இருவர் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை தலா 2 இலட்சம் ரூபா பிணையில் நீதிவான் விடுவித்தார்.