இலங்கை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு எதிராக, மக்கள் மனித உரிமை மீறப்படும் செயற்பாடுகளை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை ...
இலங்கை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு எதிராக, மக்கள் மனித உரிமை மீறப்படும் செயற்பாடுகளை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி வருகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் விசேட கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த யாழ் மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சி பிரதிநிதிகள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இலங்கை அரசால் மனித உரிமை மற்றும் மக்களின் ஜனநாயக செயற்பாட்டிற்கு அரச பாதுகாப்பு தரப்பினராலும் காவல் துறையினராலும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது.