அச்சுவேலி தொழில் பேட்டையில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரு...
அச்சுவேலி தொழில் பேட்டையில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அச்சுவேலி தொழில் பேட்டைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்த அங்கஜன் இராமநாதன், இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதேவேளை, அச்சுவேலி தொழில் பேட்டையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலம், முதலீடுகளை ஈர்ப்பதன் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்தார்.
இதேவேளை, அனைவருக்கும் வீடுகள் என்ற செயற்த்திட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 113 குடும்பங்களுக்கு, தமது வீடுளை நிர்மானிப்பதற்காக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக முதலாம் தவனை கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க்பட்டது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் , யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலாம் தவனை கொடுப்பனவுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் , யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கிவைத்தார்.