குரங்குகளால் விவசாயம் மற்றும் பயிர்வளர்ப்புக்கு இருக்கின்ற பாதிப்புக்களை தவிர்க்க வேண்டுமாயின், தன்னை குரங்குகளுக்கான அமைச்சராக நியமித்தால்...
குரங்குகளால் விவசாயம் மற்றும் பயிர்வளர்ப்புக்கு இருக்கின்ற பாதிப்புக்களை தவிர்க்க வேண்டுமாயின், தன்னை குரங்குகளுக்கான அமைச்சராக நியமித்தால் குரங்குகளின் தொல்லைகளை தீர்ப்பேன் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார் .
அதற்காக என்னை குரங்கு அமைச்சர் என்று அழைத்தாலும் நான் வருத்தப்பட போவதில்லை என்று பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை கூறினார்.
குறிப்பாக குரங்குகளால் பல்வேறு சிக்கல்களை விவாசியிகள் எதிர்நோக்கி வருகிறார்கள். எமது விவாசய உற்பத்திகளில் 60 வீதத்தை இந்த குரங்குகள் அழிக்கின்றன.
தற்போது இந்த குரங்கள் கொழும்பை அன்டிய பகுதிகளுக்கும் வந்து விட்டது. இப்படியே போனால் பாரளுமன்றமும் வந்துவிடும் .
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக நான் ” குரங்கு ” விவகார அமைச்சராக பதவியேற்கவும் தயார் என்று சொன்னார்.
இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களும் இந்த குரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் நகர்புற மக்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குரங்குகள் அதிகமாக உலர் வலய பிரதேசங்களில் கூட்டமாக வாழுகின்றது.சுமார் 50 வருட காலமாக பொலநறுவை மாவட்ட விவாசாயிகள் , பொதுமக்கள் குரங்கு தொல்லைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தற்போது பதுளை மாவட்ட விவசாயிகள் இந்த பிரச்சினையை அதிகளவு எதிர்நோக்குகின்றனர். அதிகம் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள் என்பது குறிப்பிடதக்கது