கிழக்கு கடல் பரப்பில் தீப்பற்றிய எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலில் இருந்து, இலங்கை கடற்பரப்புக்குள் எண்ணெய் கசிவதற்கான வாய்ப்பு இல்லை என கடற்படை ...
கிழக்கு கடல் பரப்பில் தீப்பற்றிய எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலில் இருந்து, இலங்கை கடற்பரப்புக்குள் எண்ணெய் கசிவதற்கான வாய்ப்பு இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் விசேட ஊடக சந்திப்பில் கடற்படையின் ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் குறித்த கப்பலில் தீயணைப்பு பணிகளுக்காக, ஒரு இலட்சம் லீற்றருக்கு அதிகளவான நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.