சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய, பாடசாலை உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸி...
சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய, பாடசாலை உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் இதற்கான ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் செயற்றிட்டத்தை மீள ஆரம்பிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது குறித்து பாடசாலைகளுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு, உரிய தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் செயற்றிட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக இடைவெளியைப் பேணி, பாடசாலை உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய இடைவேளையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பாடசாலை உணவகங்களுக்கு வருவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காலை வேளையில் வகுப்பு மட்டத்தில் மாணவர்களின் உணவு தேவைகளை கேட்டறிந்து அவற்றை, விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்குறித்த திட்டம் அல்லது வேறு பொருத்தமான திட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே 14ஆம் திகதி முதல் பாடசாலை உணவகங்கள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.