இன்றைய ஹர்த்தால் காரணமாக வடமராட்சிசியின் பருத்தித்துறை நகரும் முடங்கியது. அத்துடன் முஸ்லீம்கள் செறிவாக வாழும் ஐந்து சந்திப் பகுதியும் முடங்...
இன்றைய ஹர்த்தால் காரணமாக வடமராட்சிசியின் பருத்தித்துறை நகரும் முடங்கியது. அத்துடன் முஸ்லீம்கள் செறிவாக வாழும் ஐந்து சந்திப் பகுதியும் முடங்கியுள்ளது. இதனால் யாழ் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் வரவு வீதம் குறைவாக காணப்படுகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசிய கட்சிகளால் இன்றையதினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த ஹர்த்தாலுக்கு பலதரப்பட்ட பொது அமைப்புகளும் ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.