இன்று தினம்தோறும் நூற்றுக்கணக்கான புதிய கண்டுபிடிப்புக்கள் உலகில் நிகழ்ந்தவண்ணமே உள்ளது,இந்நிலையில் உலகில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபி...
இன்று தினம்தோறும் நூற்றுக்கணக்கான புதிய கண்டுபிடிப்புக்கள் உலகில் நிகழ்ந்தவண்ணமே உள்ளது,இந்நிலையில் உலகில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நமது ஈழத்தை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
இந்த வரிசையில் தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவநேசன் எனும் இளம் கண்டுபிடிப்பாளர் ஆவார், அடைப்பொறி எனும் கண்டுபிடிப்பினை உருவாக்கியதுடன் மட்டுமின்றி அதனை வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக இலவசமாகவும் வழங்குகின்றார், இவ்வாறாக இலைமறைகாய்களாக இருந்து பல புதிய கண்டுபிடிப்புக்களை செய்யும் இவரைப்போன்ற ஈழத்துக் கண்டுபிடிப்பாளர்கள் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களே ஆவார்.