சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வ...
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் இன்று மாலை 6.30 மணி வரையில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதுடன் இன்றைய தினம் விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் அவர் இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடவுள்ளனர்.