கரவெட்டி பிரதேச சபையின் தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப...
கரவெட்டி பிரதேச சபையின் தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட நெல்லியடிப் பகுதியில் காணிப் பிணக்கு ஒன்று தொடர்பாக பார்வையிடச் சென்றவர் மீதே இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் காயங்களுக்கு உள்ளான கரவெட்டி பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப் பாட்டைப் பதிவு செய்துள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.