தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமை நீட்சி பெற ஒன்றுபடுவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்த...
தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமை நீட்சி பெற ஒன்றுபடுவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.
அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்ற மனிதன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான். இது ஒரு இனத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் தமிழ் மக்களின் நீண்ட எதிர்பார்பாக இருந்த தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்ற எண்ணக்கருவின் மீட்சியாகவும் நீட்சியாகவும் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ்மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக அழைப்பு விட்டிருக்கும் வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு பரிபூரணமான ஆதரவினை வழங்குவோம்.
ஓற்றுமை கொண்ட மக்களை தோற்கடிக்க முடியாது என்பது போல் நாமும் ஒற்றுமைப்படுவோம் தமிழ்த்தேசிய கட்சிகளின் இவ் ஒற்றுமைக்குரலே எம் இனத்தின் வலிமையெனக்கொண்டு ஒன்றுபட்டு பயணிப்போம் என்றும் தெரிவித்தார்.