யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் யாழ்.பல்கலைக்கழக வளாக பகுதிகளில் தியாக திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த உருவப்படங்கள், நினைவு வளைவுகளை பொலிஸார...
யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் யாழ்.பல்கலைக்கழக வளாக பகுதிகளில் தியாக திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த உருவப்படங்கள், நினைவு வளைவுகளை பொலிஸார் அகற்றிக் கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் உயிர்த் தியாகம் செய்த தியாக திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும்.
திலீபன் நினைவேந்தலை நடாத்துவதற்கு தடை விதிக்குமாறு யாழ்.நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகழ்வுகளைத் தடை செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் குறித்த நினைவேந்தல் வளைவுகள் மற்றும் உருவப்படங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.