வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இன்று இடம்பெற்றது இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வ...
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இன்று இடம்பெற்றது
இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிறீ முனசிங்கவின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில்
பொலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஏனைய மாவட்ட நீதிபதிகள் பங்குபற்றுதலுடன் குறித்த பிரியாவிடை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நீதிபதிகளினால் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நினைவுப் பரிசில் கையளிக்கப்பட்டது.
1986 ம் ஆண்டு பொலிஸ்சேவையில் இணைந்து 38 வருடங்கள் சேவையாற்றிய இவர் இன்றைய தினம் ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.