மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந...
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 88 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்தவர்.
நாட்டில் இன்றுவரை கோவிட்- 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 493ஆக அதிகரித்துள்ளது.