இலங்கையில் நேற்று 586 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரித்து. நாட்...
இலங்கையில் நேற்று 586 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரித்து.
நாட்டில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், இன்று இலங்கை 10,000 என்ற எண்ணிக்கையை கடக்கக்கூடும்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 467பேரும், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 115 பேரும், மற்றும் நான்கு இந்தோனேசிய கடலோடியும், இலங்கை கடலோடி ஒருவரும் உள்ளடங்குகிறார்கள்.
மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,313 ஆக அதிகரித்தது.
கடந்த 24 மணிநேரத்தில் 67 பேர் குணமடைந்தனர். இதுவரை 4,142 பேர் குணமடைந்தனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 435 நபர்கள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
தற்போது வைத்தியசாலைகளில் 5,630 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.