கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 124 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்....
கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 124 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் நேற்று காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன், 34 வாகனங்களும் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.