பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேரு...
பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.