நாட்டில் இன்று காலை 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிர...
நாட்டில் இன்று காலை 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
அதனால் 400இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலும் ஆயிரத்து 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அஜித் ரோகண தெரிவித்தார்.
கோவிட்-19 பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நெருங்கியவர்கள் களுத்துறை பொலிஸ் கல்லூரி மற்றும் குண்டகசாலை பொலிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் வாங்கச் சென்ற உணவகக் கட்டுப்பாட்டாளர்கள் மூலம் இந்த வைரஸ் பொலிஸாருக்குப் பரவியது என்றும் அவர் கூறினார்.