கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஒருவரின் பி.சி.ஆர் சோதனையில் அவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சி...
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஒருவரின் பி.சி.ஆர் சோதனையில் அவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிலாபத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 36 வயதானவரே புத்தக கண்காட்சிக்கு சென்றுள்ளார்.
அவரது பயண விபரத்தை கொரோன கட்டுப்பாட்டு செயலணி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவர் செப்டம்பர் 23 அன்று புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தார்.
பின்னர் அதே நாளில் அவர் புறக்கோட்டை பேருந்து நிலையம், கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றிருந்தார்.
செப்ரெம்பர் 30ஆம் திகதி நுவலெியாவிற்கு சென்றிருக்கிறார்.