மகாத்மா காந்தியின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ...
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தியின் சிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் காந்தியின் சிலைக்கு இந்திய துனைத்தூதுவர் கே.பாலச்சந்திரன் மலர்மாலை அனிவித்தார்.அதன் பின்னர் அரசியல் பிரமுகர்கள் மலர்மாலை அனிவித்தனர்.மேலும் காந்தி சிலைக்கு மல்ர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,
பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சிறிதரன்,யாழ் மாவட்ட செயலர் க.மகேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவனபவன்,சுரேஸ் பிரேமச்சந்திரன்,யாழ் மாநகர சபை ஆனையாளர் என பலர் கலந்து கொண்டனர்.