அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ட்ரோன் கமெராவை பயன்படுத்தி, புகைப்படங்களை எடுத்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டு...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ட்ரோன் கமெராவை பயன்படுத்தி, புகைப்படங்களை எடுத்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு ட்ரோன் கமராவினை மீட்டதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 33 வயதுடைய நபரையும் கைது செய்து திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த ட்ரோன் கமரா இயங்கு நிலையில் காணப்பட்டதுடன், அதன் கட்டுப்பாட்டு தொகுதி இன்னும் மீட்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.