திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட...
திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல் நிலைமை சீராக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவருடன் பழகிய 55 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா மருத்துவமனையின் 15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.