விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் 14 நாள்களுக்கு இடைக்கால தடை விதித்தது. ...
விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் 14 நாள்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது.
இந்த மனு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இன்று இதனை தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீக்கப்பட்ட நிலையில், அவரை மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமைக்கு எதிராக மணிவண்ணன், யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை அடுத்து, இந்த மனு மீதான உத்தரவு இன்றைய தினம் வழங்கப்படும் முன்னரே யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.