தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை, வர இருக்கின்ற 2021 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.
இவ் உயர்மட்ட கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,புளொட் தலைவர் சித்தார்த்தன், கஜதீபன் மற்றும் ரொலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைய நாட்களில் சுமந்திரன் தரப்பு ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சென்று தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை சந்தித்த நிலையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.