நீயூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் - மானிப்பாயை...
நீயூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் - மானிப்பாயைப் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் என்பவரே நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் லிபரல் லேபா் கட்சிக்கும், பழைமைவாத தேசிய கட்சிக்கும் பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில், ஜெசிந்தா ஆா்டா்னின் லிபரல் லேபா் கட்சி 49% வாக்குகளை பெற்றன. எதிா்க்கட்சியான பழைமைவாத தேசிய கட்சி 27% வாக்குகள் மட்டுமே பெற்றன. லிபரல் லேபா் கட்சியுடன் கூட்டணி அமைத்த க்ரீன் பாா்ட்டி 7.5% வாக்குகளை பெற்றன.அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆா்டா்ன் 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.