தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூர அனுமதிக்க முடியாதென வெகுசன ஊடக அமைச்ச...
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூர அனுமதிக்க முடியாதென வெகுசன ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையினால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஐயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல பல்வேறு நிழக்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊடகவியியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார்.
இச் சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது. அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது. அதன் அடிப்படையிலேயே தீலிபனை நினைவு கூரவும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.
இதே வேளை இன்று திலீபனுக்கு நினைவேந்தல் என்றும் இது போல இன்று ஒருவர் நாளை ஒருவர் என நினைவேந்தல் செய்ய முற்படலாம். அதனாலே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நினைவு கூர தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நினைவேந்தல் நடாத்துவது அவர்களை நினைவு கூருவது என்பதெல்லாம் நிரந்தர சமாதானத்திற்கு தடையாக அமைவதுடன் அதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும். ஆகையினால் பயங்கரவாதிகளை நினைவு கூருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.