அரச வைத்தியசாலைகளின் கிளினிக் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுக...
அரச வைத்தியசாலைகளின் கிளினிக் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக காதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை அரச வைத்தியசாலைகளுடாக வீடுகளுக்கு ஔடதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அரச வைத்தியசாலைகளில் கிளினிக் ஊடாக மருத்துவ பரிசோதனைளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மறுஅறிவித்தல் வரை வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதை தவிர்த்து செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.