சுகாதாரத்துறை என்னதான் கொரோனா வைரஸ் சமூகமட்டத்தில் பரவவில்லை என்று கூறினாலும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அடையாளம் காணப்படுவதை பார்க்கின்...
சுகாதாரத்துறை என்னதான் கொரோனா வைரஸ் சமூகமட்டத்தில் பரவவில்லை என்று கூறினாலும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அடையாளம் காணப்படுவதை பார்க்கின்றபோது வைரஸ் சமூகத்தில் பரவிவிட்டது என்பதே உண்மை என அரசாங்க அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார்.
சுதேச ஒளடதங்கள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் பேசிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
விஞ்ஞானத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கூறுவதை எடுத்துக்கொண்டால் அவர்கள் பக்கமிருந்து பார்க்கின்றபோது கொரோனா தொற்றானது சமூக பரவலின் விளிம்பில் இருக்கிறது எனலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.