கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வந்த 9 மாணவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனுடைய முடிவுகள் ந...
கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வந்த 9 மாணவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனுடைய முடிவுகள் நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. நல்லூர் பொது சுகாதார பரிசோதகரின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் தொழிற்சாலையில் பணியாற்றும் பலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வருகை தந்த பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் முகாமைத்துவ பீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.