அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ...
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.
இரவு 7.35 க்கு குறித்த தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். அத்துடன், அவர்கள் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தேர்தல் இடம்பெற்றுவரும் வேளையில் இவரின் ஆசிய நாடுகளுக்கான வருகை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோ சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.