நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை மீறிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. குடும்ப அங்...
நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை மீறிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
குடும்ப அங்கத்தவர்களை அரச உயர்மட்டப் பதவிகளில் நியமிக்க இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார்.
ஆனாலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது சகோதரனாகிய வசந்த யாப்பா அபேவர்தனவை தனது தனிப்பட்ட செயலாளராக நியமித்திருக்கின்றார்.
அதுமட்டுமன்றி தனது இன்னுமொரு சகோதரனான சரத் யாப்பா அபேவர்தனவுக்கு ஊடக செயலாளர் பதவியையும் வழங்கியுள்ளார்.
இதுபோக சபாநாயகர் தனது பேரனாகிய சமீர யாப்பா அபேவர்தனவுக்கும் அதேபோல இந்துனில் யாப்பா அபேவர்தனவுக்கும் உயர் பதவிகளை வழங்கிவைத்திருக்கின்றார்.
பிரேமானந்த கொமசாறு என்பவர் சபாநாயகரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியாக உள்ளார். இவர் சபாநாயகரின் மைத்துநர் ஆவார்.
இவர்களைத் தவிர மேலும் பல பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு அவர் தனது உறவினர்களுடைய பெயர்களை முன்மொழிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.