யாழ்.வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையில் மதுபான பாவனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்...
யாழ்.வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையில் மதுபான பாவனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மதியம் வட்டுக்கோட்டைப் பொலிஸார், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலாளர், தவிசாளர் , சுகாதாரப் பிரிவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அண்மைய நாள்களாக சங்கானை சந்தையில் மதுபாவனையில் வியாபாரிகள் ஈடுபடுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் நேற்று நடவடிக்கையில் ஈடுபட்டு மதுபாவனையில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினர்.
சந்தையில் மது பாவனையில் ஈடுபடுவதற்காக தறிக்கப்பட்ட தென்னை மர குற்றியின் மேல் நெருப்பு மூட்டி மீன் சுடப்பட்டு இருப்பதையும் , அங்கு பயன்படுத்தப்பட்ட சில சாராயப் போத்தல்களும் மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை விரைவில் இனங்கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.