ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்பட...
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பிரணவதாசன் இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நேற்று கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், பரீட்சைகளை திட்டமிட்டபடி நடாத்த தீர்மானிக்கப்பட்டதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பான மேலதிக தீர்மானங்கள், அமைச்சரவைக் கலந்துரையாடலின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.